இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்

படம்
  அண்மையில் திரள் என்ற குழுவினர் நடத்திய முதல் நிகழ்வு ஒன்றில் எடுத்துக்கொண்ட தலைப்பு 'தமிழ் இலக்கியத்தில் அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்' என்ற இணைய வழி கலந்துரையாடல் ஆகும். அதே போன்ற மற்றுமொரு நீண்ட கால பேசு பொருளாக இருக்கும் விடயம்தான் படடைப்பிலக்கியத்ததில் அழகியல் தொடர்பானதும். நமக்கும் இலக்கியத்துக்கும் சொட்டாகுமா ஆகாதா? நாம் எல்லாம் இலக்கியம் தெரிந்தவர்களா தெரியாதவர்களா? இலக்கிய அழகியலில் சிலிர்த்துக் கிடக்க இரசனைப் பெற்றவர்களா அற்றவர்களா? இலக்கியம் தெரியாது என்றாலும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? அல்லது 'எமக்குத்தான்' தெரியும் என்று படம் காட்டுபவர்களை விட நமக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரியுமா என்றெல்லாம் தெரியாமல்தான் தற்செயலாக அந்த இணைய வழி நிகழ்வில் பார்வையாளராகக் கலந்து கொள்ளவேண்டி வந்தது. அழகியல் தொடர்பான வாதங்கள் நீண்ட கால விவாதப் பொருள்தான். அது 'சுட்ட' பழம் 'சுடாத' பழம் (நாவல்) சர்ச்சை 'அழகியல்' சர்ச்சையாக மாறியுள்ள இன்றைய காலம் முதல் எண்பதுகளில் ஈழத்து இலக்கிய விமர்சனத்தில் அழகியல் பற்றிய சர்ச்

வெறும் போட்டியும் வெற்றியுமே பெண்களின் வளசியாக காட்டப்படும் அரசியல்

படம்
  இலங்கை தொலைக்காட்சிகளில் இந்தியச் சின்னதிரை தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய காலங்களிலிருந்தே அத் தொடர்கள் மீது எனக்கு ஒரு வித வெறுப்பும் சலிப்பும் இருந்து வந்திருக்கிறது. இந்த தொடர்கள் மீது இருக்கின்ற வெறுப்பினால் இத் தொடர்களைக் குந்தியிருந்து பார்ப்பவர்களையும் ஆச்சரியமாகவே பார்த்திருக்கிறேன். இவர்களால் எப்படி இது முடிகிறது? இத்தனை பொறுமை அல்லது சகிப்புத்தன்மை எப்படி எங்கிருந்து வருகிறது?. இது என்ன வகையான மன நிலை? - என்று யோசிப்பதுண்டு. இக் காரணங்களினாலோ என்னவோ இத்தொடர்களை மிக ஆர்வமாகவும் வாரம் தவறாமலும் பார்ப்பவர்களை ஏதோ மனநிலை சரி இல்லாதவர்களால்தான் இது முடியுமோ என்று கூட எண்ணியதும் உண்டு. எனது தந்தை சிங்கள மொழி நாடக தொடர்களை விரும்பி பார்ப்பார். அவருக்கு தொடராக பாரக்க வேண்டும் என்பது அவசியமல்ல. அவருக்கு கதைகளை விட காட்சி அமைப்பு அந்த மனிதர்கள் பேச்சு நடை, உடை, பிரதேங்களின் மண் வாசனை அவர்கள் கொண்டிருக்கும் மாறு பட்ட நகைச்சுவை உணர்வு எல்லா வற்றையும் அழகாக கண்களால் சிரித்துக் கொண்டு அரசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் ஏற்படும் மாற்றத்தை கொண்டே எனக்கான ஆர்வம் அதிகரிக்கும். (அவர

ஈழ திருநங்கையின் அனுபவங்கள்

படம்
  தனுஜா அவர்கள் தன் வாழ்க்கை அனுபவத்தை எழுதிய புத்தகம் பற்றிய 'தனுஜா' உரையாடல் 31 ஜனவரி அன்று zoom இல் பௌசரால் நடாத்தப்பட்டது. இப்படி ஒரு புத்தகம் வருகிறது என்று அறிந்த போது அதை நான் தவறாமல் படிக்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக் கொண்டேன். நிகழ்ச்சி அதை வலுப்படுத்தியது. இலங்கையைச் சேர்ந்த தமிழ் திருநங்கையின் அனுபவங்கள் என்பவை இது வரை நாம் அறிந்தவற்றிலிருந்து மாறுபட்டவையாக, குறிப்பாக எமது ஈழத் தமிழ் பேசும் சமூகம் இது தொடர்பாக தம்மைக் குறைந்த பட்சம் குற்ற உணர்வோடும் பெறுப்புணர்வோடும் பார்க்கப் பழ ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்றும் நம்பலாம். நம்மை நாமே ஏதோ புனிதர்களாக ஒழுக்க சீலர்களாகக் காட்டிய படங்களுக்கு விழுந்த சம்மட்டி அடி என்றும் சொல்லலாம். இயலாதவர், ஒடுக்கப்பட்டவர், கைவிடப்பட்டவர் என்பவர்கள் மீதான எம் வன்முறை குணங்களில் நாம் மற்ற சமூகத்திலிருந்து ஒன்றும் குறைந்தவர் இல்லை என்பதை வரலாறு சொல்லும். அவை சந்தர்ப்பம் கிடைக்காத போது மட்டுமே நாம் எல்லோரும் தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் என்பதைச் சொல்பவை. உள் ஒன்றும் வெளி ஒன்றாகவும் போலி பிம்பங்களாக கட்டியவைகளை உடைப்பவை. அரச