இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை வனைந்த உலகு

படம்
  கடந்த 14 மே மாதம் சனிக்கிழமை அன்று மலை நடை பெற்ற ' 'கவிதை வனைந்த உலகு நிகழ்வில்'' 5 கவிதை புத்தங்கள் இடம் பெற்றன: இறுதி அமர்வாக நடை பெற்ற விஜிதரனுடைய ''குருதி வழியும் பாடல்'' கவிதை நூலைத் தோழர் வேலு அவர்களும் நானும் அதற்கான ''விமர்சன- உரையைச்'' செய்தோம். அந்நிகழ்வில் நான் பேச எண்ணி எழுதியவற்றை முழுமையாகச் சொல்ல முடியவில்லை. குறித்த நேர எல்லைகள் அதற்குக் காரணங்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான விடையங்களை தெட்டிருந்தேன் என்றே நம்புகிறேன். விமர்சனம் என்பது ஒரு படைப்பபை கூர்மைப்படுத்த உதவும். எழுதியவரின் அகத்தில் நின்று மட்டும் ஒரு வாசகரால் ஒரு படைப்பை படிக்க முடியாது. அதுவும் விமர்சன மனநிலை என்ற நிலை எமக்குள்ளால் கேள்விகளை எழுப்பி இன்னுமொரு பிரதியை கட்டமைக்கும். அதற்குள் நாம் வேண்டி நிற்பவை, எம்மால் செய்ய முடியாதவை, செய்ய கூடியவை எல்லாம் விமர்சனமாக வெளிவரும். அது குறித்த படைப்பில் இருக்கும் ஆழ்ந்த ஈடு பாடே அன்றி வெறுப்பல்ல. அதிலும் சமூக அறியல் தேடலுடையவர்களுக்கு விமர்சனமும் அதை நோக்காக கொண்டே இருக்கும். இரசனைக்கும் அறிவுக்கும் இலக்கி

மக்களுடன் நின்றே மக்களை அனைத்து மக்களுக்காகவும் வெல்ல முடியும்✊🤜🤛

படம்
  இலங்கை மக்களின் தற்போதைய அரசாங்க எதிர்ப்பு போராட்ட அலை பலமானது அதை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அது தன்நெழிர்சியான போராட்ட வடிவமாக உள்ளது. அதற்கு கோட்பாட்டுச் செயற்பாட்டுப் பலமிக்க போராட்ட சக்தி கொண்ட கட்சியோ அமைப்போ இவற்றின் பின் நிமிர்ந்து நிற்குமானால் இலங்கையின் இன்றைய நிலை முற்று முழுதாக வேறான ஒன்றாக இருந்திருக்கும். மெல்போனின் நடந்த போராட்ட நிகழ்வில் முள்ளிவாய்கால் நினைவு பிரசுரம் கொடுக்கப்பட்ட போது கிழித்தெறியப் பட்டு அங்கு நடந்தது இனப்படுகொலையில்லை என்று அங்கிருந்தவர்களை தன் பின்னால் திரட்ட முனைந்த சிலரது செயற்பாடு வெறும் தற்செயலானது என்று மட்டும் சொல்லி விட முடியாது. அதன் பின்னால் சிங்கள பௌத்த பெருந் தேசிய கருத்தியல் மிக ஆழமாக உள்ளது. அதைக் குறைத்தும் மதிப்பிடுவது மிக ஆபத்தானது. கோட்டாவும் அவரது குடும்ப ஆட்சியும் பொருளாதார பிரச்சனையோடு தொடர்பானதாகச் சிங்கள மக்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் கோட்டா தமிழ் பேசும் மக்களுக்கும் இடதுசாரிகளுக்கும் வெறும் பொருளாதார நெருக்கடியோடு குமட்டுமானவரல்ல. பச்சையான இனப் படுகொலையுடனும் இனவாதத்துடனும் என்பதை மறப்ப