இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுயமரியாதை திருமணம் என்ற பெயரும்; பாலிய அயோக்கியனும்...

  குறிப்பு: இந்த அறிக்கை 16.08.2021 அன்று  முற்போக்கு வெளியை பெண்களுக்கு பாதுகாப்பாக மாற்றுவதற்காக செயற்படும் கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப் பட்டடு கையெழுத்திடப்பட்டது. அதை ஆவணப் படுத்தும் முகமாக இதில் மீள் பதியப்பட்டுகிறது. அதனுடைய முக நூல் இணைப்பு இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிராக அணி திரள்வோம் தம்மை முற்போக்குவாதிகளாகவும் புரட்சிகரச் சக்திகளாகவும் வெளியுலகிற்குக் காட்டிக் கொள்ளும் சில போலிகளின் முகத்திரைகளைக் கிழித்து அம்பலப்படுத்துவது சமூக மாற்றத்தை நோக்கி உழைக்கும் அனைவரினதும் கடமையாகும். உருவில் மனிதனாகவும் செயலில் மிருகமாகவும் இருப்பதை மாற்றி மனித தன்மையுடைய மனிதத் சமுதாயத்தை உருவாக்குவதே எனது லட்சியம் என்றார் தந்தை பெரியார். தாம் வரிந்து கொண்டதாகச் சொல்லப்படும் இடதுசாரிய பெரியாரியக் கொள்கைகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு தாம் அணியும் மேற்சட்டைகளில் மாத்திரம் தம்மை

கோணங்கியுடைய பாலியல் குற்றங்களும் பதட்டமடையும் ஜெ.மோகனும்

படம்
  கோணங்கியுடைய பாலில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கிய உலகில் இருப்பவர் மனங்களில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அச்சம் என்னவாக இருக்கிறது என்றால் இந்த இலக்கிய ஆசான்களின் மீது பக்தர் கூட்டத்தின் பக்தியில் பாதிப்பு வந்து விடுமோ என்ற பதட்டமாகவே நான் பார்க்கிறேன். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் அவசரத்தின் அவசியம் அதில் இருப்பதாகத்தான் இருக்கிறது. கோணங்கியுடைய  பாலியல் நடத்தை தொடர்பில் பல இளைஞர்கள் சமூக வளைத்தளண்க்களில் தொடர்ச்சியாக தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அது தொடர்பில் கூட்டறிக்கையும் வெளிவந்துள்ளது. கூட்டறிக்கை: எந்த ஒரு அதிகார சக்திகளுக்கும் பக்தர் கூட்டம் அவசியமான ஒன்று. அந்த வட்டத்திற்குள்ளேயே வட்டமடித்து அதற்குள் வெளியே சிந்திக்காமல் வைத்திருப்பதில்தான் அவர்களது கிரீடம் பாதுக்கப்படுகிறது. இது இலக்கிய படைப்பாளிகள் என்று தமக்குத் தாமே ‘படைப்புக் கொள்கையை’ புகழாகச் சூட்டிக் கொள்கின்றவர்களிடமும் கொஞ்சமும் குறைந்ததில்லை. பாலியல் சுரண்டல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் ஏமாற்று செய்பவர்கள் மிக மோசமான சமூக விரோதிகள் என